sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருச்சிற்றம்பலக் கோவையார்
8.201 முதல் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.202 இரண்டாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.203 மூன்றாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.204 நான்காம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.205 ஐந்தாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.206 ஆறாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.207 ஏழாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.208 எட்டாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.209 ஒன்பதாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.210 பத்தாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.211 பதினொன்றாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.212 பன்னிரண்டாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.213 பதின்மூன்றாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.214 பதினென்காம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.215 பதினைந்தாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.216 பதினாறாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.217 பதினேழாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.218 பதினெட்டாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.219 பத்தொன்பதாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.220 இருபதாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.221 இருபத்தொன்றாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.222 இருபத்திரண்டாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.223 இருபத்திமூன்றாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.224 இருபத்திநான்காம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )
8.225 இருபத்தைந்தாம் அதிகாரம்   (கோயில் (சிதம்பரம்) )

Back to Top
8.201 முதல் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

திருவளர் தாமரை சீர்வளர்
   காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
   காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
   னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
   கொடிபோன் றொளிர்கின்றதே.

[1]
போதோ விசும்போ புனலோ
   பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
   மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
   விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
   நின்றவர் வாழ்பதியே.

[2]
பாயும் விடையரன் றில்லையன்
   னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
   வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
   ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
   தோளிச் சிறுநுதலே.

[3]
அகல்கின்ற வல்குற் றடமது
   கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
   யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
   யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
   னம்மன்ன பல்வளைக்கே.

[4]
அணியு மமிழ்துமென் னாவியு
   மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
   யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
   பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
   தோளி படைக்கண்களே.

[5]
வளைபயில் கீழ்கட னின்றிட
   மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
   தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
   கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
   வேன்தெய்வ மிக்கனவே.

[6]
ஏழுடை யான்பொழி லெட்டுடை
   யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
   பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
   விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
   காய்வந் தகப்பட்டதே.

[7]
சொற்பா லமுதிவள் யான்சுவை
   யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
   நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
   புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
   தோட்ட களவகத்தே.

[8]
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
   சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
   வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
   போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
   போல வளர்கின்றதே.

[9]
அளவியை யார்க்கு மறிவரி
   யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
   கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
   தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
   யார்வாயிற் கேட்கின்றதே.

[10]
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
   பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
   யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
   தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
   காள்நும் அகன்பணையே.

[11]
சிந்தா மணிதெண் கடலமிர்
   தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
   மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
   யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
   வாட்டந் திருத்துவதே.

[12]
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
   பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
   சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
   நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
   அறியே னயர்கின்றதே.

[13]
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
   கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
   பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
   பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
   வாடிப் புலம்புவதே.

[14]
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
   யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
   யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
   பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
   மேய்க்குங் கனங்குழையே.

[15]
தெளிவளர் வான்சிலை செங்கனி
   வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
   யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
   கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
   னேவந்து தோன்றுவனே.

[16]
புணர்ப்போன் நிலனும் விசும்பும்
   பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
   லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
   னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
   அறியேன் புகுந்ததுவே.

[17]
உயிரொன் றுளமுமொன் றொன்றே
   சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
   நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
   தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
   லாகும் பணிமொழிக்கே.

[18]

Back to Top
8.202 இரண்டாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

பூங்கனை யார்புனற் றென்புலி
   யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
   பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
   கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
   பாவையை யெய்துதற்கே.

[1]
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
   பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
   ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
   யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
   லாம்புகுந் தெய்தியதே.

[2]
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
   குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
   தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
   நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
   னாற்ற லகற்றியதே.

[3]
உளமாம் வகைநம்மை யுய்யவந்
   தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
   தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
   நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
   மண்ண லிரங்கியதே.

[4]
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
   தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
   கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
   யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
   மென்றோட் கரும்பினையே.

[5]
விலங்கலைக் கால்விண்டு மேன்மே
   லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
   காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
   தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
   லுள்ளந் துயர்கின்றதே.

[6]
தலைப்படு சால்பினுக் குந்தள
   ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
   தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
   றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
   வுற்று மயங்கினனே.

[7]
நல்வினை யும்நயந் தந்தின்று
   வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
   பாமென்று பாங்கன்சொல்லவில்வினை மேருவில் வைத்தவன்
   தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
   தாருயிர் துப்புறவே.

[8]
ஆலத்தி னாலமிர் தாக்கிய
   கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
   வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
   மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
   தொழிவதென் தீவினையே.

[9]
நின்னுடை நீர்மையும் நீயு
   மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
   தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
   ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
   னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

[10]
விழியாற் பிணையாம் விளங்கிய
   லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
   னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
   கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
   லாமெங் குலதெய்வமே.

[11]
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
   தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
   காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
   வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
   நண்ணும் பளிக்கறையே.

[12]
கொடுங்கால் குலவரை யேழேழ்
   பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
   நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
   லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
   நீழலந் தண்புனத்தே.

[13]
வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
   இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
   சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
   ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
   ளேஅப் பணிமொழியே.

[14]
குவளைக் களத்தம் பலவன்
   குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
   றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
   தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
   யானிக் கடலிடத்தே.

[15]
பணந்தா ழரவரைச் சிற்றம்
   பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
   யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
   பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
   டேனொன்று நின்றதுவே.

[16]
கயலுள வேகம லத்தலர்
   மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
   நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
   பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
   தூங்கிப் புரள்வனவே.

[17]
எயிற்குல மூன்றிருந் தீயெய்த
   வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
   வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
   கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
   வென்னுடை மன்னுயிரே.

[18]
ஆவியன் னாய்கவ லேல்அக
   லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
   ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
   சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
   லாயத் தருவரையே.

[19]
காம்பிணை யாற்களி மாமயி
   லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
   லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
   கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
   தோன்றுமென் சிந்தனைக்கே.

[20]
நேயத்த தாய்நென்ன லென்னைப்
   புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
   காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
   தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
   நின்றதென் மன்னுயிரே.

[21]
தாதிவர் போதுகொய் யார்தைய
   லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
   சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
   லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
   தான்மலை யெய்துதற்கே.

[22]
காவிநின் றேர்தரு கண்டர்வண்
   தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
   றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
   வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
   கேயின் றழிகின்றதே.

[23]
அகலிடந் தாவிய வானோ
   னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
   ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
   நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
   வாய்தரு பூங்கொடியே.

[24]
தாழச்செய் தார்முடி தன்னடிக்
   கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
   தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
   புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
   புதைநின்னை வாணுதலே.

[25]
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
   கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
   மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
   பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
   மெழுகொத் தழிகின்றதே.

[26]
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
   கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
   லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
   ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
   காள்கொண்டை சார்வதுவே.

[27]
நீங்கரும் பொற்கழற் சிற்றம்
   பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
   மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
   தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
   மாட்கொண்ட கொங்கைகளே.

[28]
சூளா மணியும்பர்க் காயவன்
   சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
   ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
   பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
   லாயம் நணுகுகவே.

[29]
பொய்யுடை யார்க்கரன் போலக
   லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
   போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
   பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
   காக்கும்பைம் பூம்புனமே.

[30]

Back to Top
8.203 மூன்றாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

என்னறி வால்வந்த தன்றிது
   முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
   தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
   பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
   மின்றோய் பொழிலிடத்தே.

[1]

Back to Top
8.204 நான்காம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

எளிதன் றினிக்கனி வாய்வல்லி
   புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
   பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
   செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
   வாழி யறிவிப்பனே.

[1]
குவளைக் கருங்கட் கொடியே
   ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
   தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
   பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
   னேயினிச் சொல்லுவனே.

[2]
இருங்களி யாயின் றியானிறு
   மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
   லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
   மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
   டோவரக் கண்டதுவே.

[3]
கருங்கண் ணனையறி யாமைநின்
   றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
   வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
   புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
   தீங்கொரு வான்கலையே.

[4]
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
   பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
   தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
   கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
   குரைமின்கள் சென்னெறியே.

[5]
ஒருங்கட மூவெயி லொற்றைக்
   கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
   கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
   கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
   யோவிங்கு வாழ்பவர்க்கே.

[6]
தாரென்ன வோங்குஞ் சடைமுடி
   மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
   றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
   வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
   யீர்ங்குழற் பேதையரே.

[7]
இரத முடைய நடமாட்
   டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
   யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
   பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
   திறக்கிற் சலக்கென்பவே.

[8]
வின்னிற வாணுதல் வேனிறக்
   கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
   றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
   வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
   மணிநிறப் பூந்தழையே.

[9]
கலைக்கீ ழகலல்குற் பாரம
   தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
   றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
   பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
   எதுநுங்கள் சிற்றிடையே.

[10]

Back to Top
8.205 ஐந்தாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

பல்லில னாகப் பகலைவென்
   றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
   வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
   வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
   வானிச் சுனைப்புனமே.

[1]
ஆழமன் னோவுடைத் திவ்வையர்
   வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
   தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
   வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
   கழிந்தது வந்துவந்தே.

[2]

Back to Top
8.206 ஆறாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

நிருத்தம் பயின்றவன் சிற்றம்
   பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
   மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
   தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
   மெல்லியல் வாடியதே.

[1]

Back to Top
8.207 ஏழாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.

[1]
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
   லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
   நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
   யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
   தோன்று மொளிமுகத்தே.

[2]
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
   செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
   றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
   பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
   முள்ளந் தழைத்திடுமே.

[3]
மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
   மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
   திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
   வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
   தேனுண் டெழிறருமே.

[4]

Back to Top
8.208 எட்டாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

மைவார் கருங்கண்ணி செங்கரங்
   கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
   பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
   றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
   வெள்ளைச் சிறுபிறைக்கே.

[1]
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
   அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
   செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
   றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
   காகுமுனக்கவளே.

[2]
செந்நிற மேனிவெண் ணீறணி
   வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
   லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
   தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
   குடைவ னிருஞ்சுனையே.

[3]
பருங்கண் கவர்கொலை வேழப்
   படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
   தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
   விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
   றோமற்றவ் வான்சுனையே.

[4]
காகத் திருகண்ணிற் கொன்றே
   மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
   யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
   லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
   வருமின்பத் துன்பங்களே.

[5]

Back to Top
8.209 ஒன்பதாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

ஆவா விருவ ரறியா
   அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
   றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
   தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
   வாறின்றொ ராண்டகையே.

[1]

Back to Top
8.210 பத்தாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

பொருளா வெனைப்புகுந் தாண்டு
   புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
   சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
   செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
   தழியுமென் னாருயிரே.

[1]
காய்சின வேலன்ன மின்னியல்
   கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
   தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
   மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
   சீறூர்ப் பனைமடலே.
[2]
விண்ணை மடங்க விரிநீர்
   பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
   காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
   பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
   பண்ணிற்றொர் பெண்கொடியே.

[3]
கழிகின்ற வென்னையும் நின்றநின்
   கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
   கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
   பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
   தெருவிடைப் போதுவனே.

[4]
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
   நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
   மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
   முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
   தோமன்ன இன்னருளே.

[5]
அடிச்சந்த மால்கண் டிலாதன
   காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
   னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
   கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
   வோநும் பரிசகத்தே.

[6]
யாழு மெழுதி யெழின்முத்
   தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
   தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
   தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
   டேற்கொண்டு போதுகவே.

[7]
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
   திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
   இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
   வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
   செய்க அறிந்தனவே.

[8]
பைந்நா ணரவன் படுகடல்
   வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
   புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
   அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
   லாட்கென்க ணின்னருளே.

[9]

Back to Top
8.211 பதினொன்றாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
   வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
   யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
   வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
   வார்குழ லேந்திழையே.

[1]
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
   மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
   ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
   பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
   னொருவனித் தேம்புனமே.

[2]
நீகண் டனையெனின் வாழலை
   நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
   ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
   கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
   றானப் பெருந்தகையே.

[3]
சங்கந் தருமுத்தி யாம்பெற
   வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
   பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
   னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
   வானவன் நேர்வருமே.

[4]
புரங்கடந் தானடி காண்பான்
   புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
   னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
   றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
   முன்றிலம் மாயவனே.

[5]
உள்ளப் படுவன வுள்ளி
   யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
   யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
   அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
   தறிவிலென் கூற்றுக்களே.

[6]
மேவியந் தோலுடுக் குந்தில்லை
   யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
   னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
   பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
   லேறக்கொல் பாவித்ததே

[7]
பொன்னார் சடையோன் புலியூர்
   புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
   றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
   னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
   நீர்மை இனியவர்க்கே.

[8]

Back to Top
8.212 பன்னிரண்டாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

தேமென் கிளவிதன் பங்கத்
   திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
   ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
   செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
   வோமுற்றக் கற்றதுவே.

[1]
ஆரத் தழையராப் பூண்டம்
   பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
   றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
   லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
   ரெனவரும் ஐயுறவே.

[2]
முன்றகர்த் தெல்லா விமையோரை
   யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
   தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
   ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
   மூடுமென் றெள்குதுமே.

[3]
யாழார் மொழிமங்கை பங்கத்
   திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
   தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
   வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
   சிலம்ப தருந்தழையே.

[4]
எழில்வா யிளவஞ்சி யும்விரும்
   பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
   தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
   றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
   தில்லையிப் பூந்தழையே.

[5]
உறுங்கண்ணி வந்த கணையுர
   வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
   வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
   வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
   நாணுமிக் குன்றிடத்தே.

[6]
நறமனை வேங்கையின் பூப்பயில்
   பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
   யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
   டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
   பலவன் நெடுவரையே .

[7]
கற்றில கண்டன்னம் மென்னடை
   கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
   பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
   ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
   யூரன்ன பூங்கொடியே.

[8]
முனிதரு மன்னையும் மென்னையர்
   சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
   குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
   பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
   றான்சுடர்க் கொற்றவனே.

[9]
அந்தியின் வாயெழி லம்பலத்
   தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
   பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
   சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
   மொழிசென்றம் மொய்குழற்கே.

[10]
தெங்கம் பழங்கமு கின்குலை
   சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
   நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
   குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
   சிறுமியெந் தேமொழியே.

[11]
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
   றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
   எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
   கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
   கையிற் கொடுஞ்சிலையே.

[12]
மைத்தழை யாநின்ற மாமிடற்
   றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
   போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
   வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
   பாவம் பெரியவரே.

[13]
அக்கும் அரவும் அணிமணிக்
   கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
   வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
   ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
   யாத வியல்பினவே.

[14]
உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.

[15]
பண்டா லியலு மிலைவளர்
   பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
   லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
   துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
   கொல்லோ கருதியதே.

[16]
மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
   வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
   றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
   தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
   றோஎன் விழுத்துணையே.

[17]
விண்ணிறந் தார்நிலம் விண்டவ
   ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
   தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
   சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
   தோமன்ன நின்னருளே.

[18]
குவவின கொங்கை குரும்பை
   குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
   கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
   சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
   கின்ற தொளிமுகமே.

[19]
ஈசற் கியான்வைத்த வன்பி
   னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
   யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
   தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
   நீளம் பெருங்கண்களே.

[20]
தோலாக் கரிவென்ற தற்குந்
   துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
   யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
   லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
   நீதந்த கொய்தழையே.

[21]
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
   யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
   காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
   நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
   யேன் சொல்லும் ஈடவற்கே.

[22]
தவளத்த நீறணி யுந்தடந்
   தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
   யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
   கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
   பார்குழல் தூமொழியே.

[23]
ஏறும் பழிதழை யேற்பின்மற்
   றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
   யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
   மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
   யாஞ்செய்வ தேந்திழையே.

[24]
தெவ்வரை மெய்யெரி காய்சிலை
   யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
   பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
   டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
   திற்றந்த ஈர்ந்தழையே.

[25]
பாசத் தளையறுத் தாண்டுகொண்
   டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
   தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
   மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
   தனவில்லை பூந்தழையே.

[26]

Back to Top
8.213 பதின்மூன்றாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

[1]
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

[2]
தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.

[3]
நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே.

[4]
படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே.

[5]
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 9;
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.

[6]
அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

[7]
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

[8]
கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
   பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
   தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
   சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
   சேர்க திருத்தகவே.

[9]
பொன்னனை யான்தில்லைப் பொங்கர
   வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
   போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
   யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
   தாழ்குழற் கேய்வனவே.

[10]
அறுகால் நிறைமல ரைம்பால்
   நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
   லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
   வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
   யூரன்ன வொண்ணுதலே.

[11]
தழங்கு மருவியெஞ் சீறூர்
   பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
   டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
   டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
   தில்லை மணிநகர்க்கே.

[12]
தள்ளி மணிசந்த முந்தித்
   தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
   பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
   யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
   போன்ற வனமுலையே.

[13]
மாடஞ்செய் பொன்னக ரும்நிக
   ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
   பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
   தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
   றோநின்று கூறுவதே.

[14]
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
   கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
   சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
   அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
   காவலித் தாழ்வரையே.

[15]
மன்னுந் திருவருந் தும்வரை
   யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
   வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
   சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
   னென்னப் புலம்புவனே.

[16]
பனித்துண்டஞ் சூடும் படர்சடை
   அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
   கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
   பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
   கென்றஞ்சு மெம்மனையே.

[17]
ஈவிளை யாட நறவிளை
   வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
   நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
   அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
   யாடி திருமலைக்கே.

[18]
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
   பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
   பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
   யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
   பகர்பெரு வார்த்தைகளே.

[19]
வழியும் அதுவன்னை யென்னின்
   மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
   னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
   றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
   வென்னோ கிளக்கின்றதே.

[20]
படையார் கருங்கண்ணி வண்ணப்
   பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
   ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
   டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
   போலு முருவினதே.

[21]
உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.

[22]
மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே.

[23]
வடிவார் வயற்றில்லை யோன்மல
   யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
   தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
   யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
   பெருமஇத் தண்புனமே.

[24]
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
   திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
   மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
   றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
   தாகி விளைந்ததுவே.

[25]
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.

[26]
வழுவா இயலெம் மலையர்
   விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
   லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
   பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
   தாவதித் தொல்புனத்தே.

[27]
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
   புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
   மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
   கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
   தின்றிக் கடிப்புனமே.

[28]
பரிவுசெய் தாண்டம் பலத்துப்
   பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
   கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
   பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
   காட்டு மிளங்கிளியே.

[29]
கணியார் கருத்தின்று முற்றிற்
   றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
   டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
   அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
   நீர்மைகள் சொல்லுமினே.

[30]
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
   புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
   வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
   றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
   வாமற்றிவ் வான்புனமே.

[31]
ஆனந்த மாக்கட லாடுசிற்
   றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
   ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
   அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
   தளர்ந்தனை நன்னெஞ்சமே.

[32]

Back to Top
8.214 பதினென்காம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

மருந்துநம் மல்லற் பிறவிப்
   பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
   அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
   தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
   ரதனுக்கு வெள்வளையே. 9;

[1]
விசும்பினுக் கேணி நெறியன்ன
   சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
   தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
   கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
   மலயத்தெம் வாழ்பதியே.

[2]
மாற்றே னெனவந்த காலனை
   யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
   கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
   போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
   நீவைத்த அன்பினுக்கே.

[3]
கூளி நிரைக்கநின் றம்பலத்
   தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
   யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
   தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
   னுரைப்பதென் மெல்லியற்கே.

[4]
வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

[5]
செம்மல ராயிரந் தூய்க்கரு
   மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
   தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
   தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
   வாய்நும ராடுவதே.

[6]
பனைவளர் கைம்மாப் படாத்தம்
   பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
   மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
   தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
   றாடுஞ் செழும்பொழிலே.

[7]
மலவன் குரம்பையை மாற்றியம்
   மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
   கானலிற் சீர்ப்பெடைய
ோடலவன் பயில்வது கண்டஞர்
   கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
   தாங்கொன்மன் சேர்துயிலே

[8]
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
   தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
   வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
   நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
   வான்சொல்லு மெல்லியலே.

[9]
செழுங்கார் முழவதிர் சிற்றம்
   பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
   வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
   வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
   மோவின்றெம் வள்ளலையே.

[10]
ஓங்கு மொருவிட முண்டம்
   பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
   வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
   றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
   யேன்சொல்லும் வாசகமே.

[11]
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
   கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
   செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
   மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
   யுறார்செல்லுஞ் செல்லல்களே.

[12]
முன்னு மொருவ ரிரும்பொழில்
   மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
   தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
   தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
   பேரும் மயிலினமே.

[13]
கூடார் அரண்எரி கூடக்
   கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
   னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
   யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
   நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

[14]
விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
   கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
   தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
   றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
   வாழுங் கருங்குழலே.

[15]
நந்தீ வரமென்னும் நாரணன்
   நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
   யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
   இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
   வீயுந் தருகுவனே.

[16]
காமரை வென்றகண் ணோன்தில்லைப்
   பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
   வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
   சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
   வைகி நயந்ததுவே.

[17]
அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
   வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
   தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
   தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
   மாக்கும் புணர்முலையே.

[18]
அழுந்தேன் நரகத் தியானென்
   றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
   புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
   மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
   வானத் திளமதியே.

[19]
சுரும்புறு நீலங் கொய்யல்
   தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
   நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
   வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
   பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.

[20]
நற்பகற் சோமன் எரிதரு
   நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
   திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
   தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
   நாடஇக் கல்லதரே.

[21]
பைவா யரவரை அம்பலத்
   தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
   தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
   யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
   தென்றுமென் இன்னுயிரே.

[22]
பைவா யரவும் மறியும்
   மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
   தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
   சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
   நீண்முத்த மாலைகளே.

[23]
நாகந் தொழவெழில் அம்பலம்
   நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
   யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
   நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
   வாய்த்தநின் நாயகமே.

[24]
மின்னங் கலருஞ் சடைமுடி
   யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
   தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
   வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
   துயிலா தழுங்கினவே.

[25]
சோத்துன் னடியமென் றோரைக்
   குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
   யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
   மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி

   நோக்காய் பெருங்கடலே.

[26]
மாதுற்ற மேனி வரையுற்ற
   வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
   காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
   மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
   வோநன்மை செப்புமினே.

[27]
இன்னற வார்பொழிற் றில்லை
   நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
   லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
   துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
   ஞாளி குரைதருமே.

[28]
தாருறு கொன்றையன் தில்லைச்
   சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
   நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
   அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
   பாற்றன்று தூங்கிருளே.

[29]
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
   தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
   புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
   லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
   யேற்கொரு வாசகமே.

[30]
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
   பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
   னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
   வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
   ளோமங்கை வாழ்வகையே.

[31]
பூங்கணை வேளைப் பொடியாய்
   விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
   விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
   கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
   ரோசென் றகன்றவரே.

[32]
அலரா யிரந்தந்து வந்தித்து
   மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
   தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
   தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
   மிக்கைய மெய்யருளே.

[33]

Back to Top
8.215 பதினைந்தாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

புகழும் பழியும் பெருக்கிற்
   பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
   லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
   யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
   யாம்பழி சின்மொழிக்கே.

[1]
ஆரம் பரந்து திரைபொரு
   நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
   தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
   ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
   சிறந்தார்க்குஞ் செறிகடலே.

[2]
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
   பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
   னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
   றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
   யூர்சுற்றும் போர்க்கடலே.

[3]
பகன்தா மரைக்கண் கெடக்கடந்
   தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
   நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
   புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
   லோநம் மகன்றுறையே.

[4]
உள்ளு முருகி யுரோமஞ்
   சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
   தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
   தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
   ஆர்க்கும் பொருகடலே.

[5]
ஆழி திருத்தும் புலியூ
   ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
   நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
   கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
   யோவுள்ளம் வள்ளலையே

[6]
கார்த்தரங் கந்திரை தோணி
   சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
   துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
   பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
   மாறென்கொ லாழ்சுடரே.

[7]
பகலோன் கரந்தனன் காப்பவர்
   சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
   யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
   சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
   மீனுண்ட அன்னங்களே.

[8]
பொன்னும் மணியும் பவளமும்
   போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
   விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
   பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
   தேரும்வண் டானங்களே. 9;

[9]
கருங்கழி காதற்பைங் கானலில்
   தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
   செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
   றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
   கூப்பும் மலர்க்கைகளே.

[10]
மூவல் தழீஇய அருண்முத
   லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
   துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
   யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
   தளிய களியன்னமே.

[11]
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
   கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
   மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
   றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
   யான்இன் றிரக்கின்றதே.

[12]
வளருங் கறியறி யாமந்தி
   தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
   பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
   மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
   யூரன்ன வொண்ணுதலே.

[13]

Back to Top
8.216 பதினாறாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

ஒராக மிரண்டெழி லாயொளிர்
   வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
   தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
   மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
   யேயெம ரெண்ணுவதே.

[1]
மணியக் கணியும் அரன்நஞ்ச
   மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
   தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
   துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
   மேன்மே லயலவரே.

[2]
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
   மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
   ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
   நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
   தழங்கும் மணமுரசே.

[3]
எலும்பா லணியிறை யம்பலத்
   தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
   கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
   கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
   யென்நீ கருதுவதே.

[4]
விசும்புற்ற திங்கட் கழும்மழப்
   போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
   கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
   றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
   தளர்கின்ற நன்னெஞ்சமே.

[5]
மைதயங் குந்திரை வாரியை
   நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
   ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
   லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
   யும்மல்குற் பைந்தொடியே.

[6]
மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
   பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
   கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
   தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
   தாளின்றென் பைந்தொடியே.

[7]
மெல்லியல் கொங்கை பெரியமின்
   நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
   தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
   கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
   சேய்த்தெம் அகல்நகரே.

[8]
பிணையுங் கலையும்வன் பேய்த்தே
   ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
   அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
   யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
   டேகினெம் பைந்தொடிக்கே.

[9]
இங்கய லென்னீ பணிக்கின்ற
   தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
   லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
   நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
   கண்ணித் திருநுதலே.

[10]
தாயிற் சிறந்தன்று நாண்தைய
   லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
   கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
   தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
   சிறந்த மதிநுதலே.

[11]
குறப்பாவை நின்குழல் வேங்கையம்
   போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
   வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
   வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
   னத்தகும் பெற்றியரே.

[12]
நிழற்றலை தீநெறி நீரில்லை
   கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
   னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
   கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
   பாகும்நங் கொற்றவர்க்கே.

[13]
காயமும் ஆவியும் நீங்கள்சிற்
   றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
   லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
   கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
   போக்குத் துணிவித்தவே.

[14]
மற்பாய் விடையோன் மகிழ்புலி
   யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
   விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
   பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
   வாழி எழுமையுமே.

[15]
கம்பஞ் சிவந்த சலந்தரன்
   ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
   கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
   நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
   கும்மலர்ச் சீறடிக்கே.

[16]
முன்னோன் மணிகண்ட மொத்தவன்
   அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
   தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
   னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
   யாம்விழை பொங்கிருளே.

[17]
பனிச்சந் திரனொடு பாய்புனல்
   சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
   யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
   போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
   லாம்புகுந் தெய்துவதே.

[18]
வைவந்த வேலவர் சூழ்வரத்
   தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
   முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
   மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
   துயிலுமிம் மூதெயிலே.

[19]
பறந்திருந் தும்பர் பதைப்பப்
   படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
   னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
   தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
   வற்றுமிச் சேணிலத்தே.

[20]
ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
   நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
   நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
   சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
   சேர்க திருத்தகவே.

[21]
பேணத் திருத்திய சீறடி
   மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
   யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
   சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
   னாமன்னு கானங்களே.

[22]
கொடித்தேர் மறவர் குழாம்வெங்
   கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
   வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
   நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
   விண்தோய் கனவரையே.

[23]
முன்னோ னருள்முன்னும் உன்னா
   வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
   கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
   தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
   மாடுசிற் றம்பலமே.

[24]
விடலையுற் றாரில்லை வெம்முனை
   வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
   மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
   தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
   இன்றிக் கடுஞ்சுரமே.

[25]
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
   ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
   பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
   தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
   போன்றொளிர் நாடகமே.

[26]
கண்கடம் மாற்பயன் கொண்டனங்
   கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
   பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
   மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
   கானகந் தண்ணெனவே.

[27]
மின்றங் கிடையொடு நீவியன்
   தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
   தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
   வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
   சூழ்தரு சேண்நகரே.

[28]
மின்போல் கொடிநெடு வானக்
   கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
   காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
   சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
   தோன்றுநன் னீணகரே.

[29]
செய்குன் றுவைஇவை சீர்மலர்
   வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
   பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
   உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
   வற்கிடம் ஏந்திழையே.

[30]
மயிலெனப் பேர்ந்திள வல்லியி
   னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
   குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
   தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
   கொலாமின் றயர்கின்றதே.

[31]
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
   யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
   மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
   ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
   லாயத்தெம் வாணுதலே.

[32]
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
   தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
   பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
   அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
   யாவன எம்மனைக்கே.

[33]
முறுவல்அக் கால்தந்து வந்தென்
   முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
   லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
   சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
   வானா மொளியிழையே.

[34]
தாமே தமக்கொப்பு மற்றில்
   லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
   பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
   கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
   யேன்பெற்ற அம்மனைக்கே.

[35]
தழுவின கையிறை சோரின்
   தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
   பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
   பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
   யாலுற்றுத் தேய்வித்ததே.

[36]
யாழியன் மென்மொழி வன்மனப்
   பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
   துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
   றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
   யாரின் அருஞ்சுரமே.

[37]
கொன்னுனை வேல்அம் பலவற்
   றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
   சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
   ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
   னுள்ளத்தை யீர்கின்றதே.

[38]
பெற்றே னொடுங்கிள்ளை வாட
   முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
   தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
   தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
   தேன்சுடர் வானவனே.

[39]
வைம்மலர் வாட்படை யூரற்குச்
   செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
   லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
   றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
   பதைக்குமெங் கார்மயிலே.

[40]
வேயின தோளி மெலியல்விண்
   ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
   தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
   ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
   நாடுவன் பொன்னினையே.

[41]
பணங்களஞ் சாலும் பருவர
   வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
   இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
   நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
   சேட்டைக் குலக்கொடியே.

[42]
முன்னுங் கடுவிட முண்டதென்
   தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
   கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
   தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
   நான்மறை யுத்தமரே.

[43]
தெள்வன் புனற்சென்னி யோன்அம்
   பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
   செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
   யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
   யென்று கருதுவனே.

[44]
பாலொத்த நீற்றம் பலவன்
   கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
   பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
   இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
   மாணிழை கால்மலரே.

[45]
பேதைப் பருவம் பின்சென்
   றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
   பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
   றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
   பற்குரற் பொற்றொடியே.

[46]
புயலன் றலர்சடை ஏற்றவன்
   தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
   போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
   வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
   வாழி எழிற்புறவே.

[47]
பாயும் விடையோன் புலியூ
   ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
   கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
   வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
   நிலாவிடும் நீள்குரவே.

[48]
சுத்திய பொக்கணத் தென்பணி
   கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
   யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
   மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
   மோவொர் பெருந்தகையே.

[49]
வெதிரேய் கரத்துமென் தோலேய்
   சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
   வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
   எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
   வெறுப்பவொ ரேந்தலொடே.

[50]
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
   நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
   ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
   னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
   யோஅன்னை சொல்லியதே.

[51]
பூங்கயி லாயப் பொருப்பன்
   திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
   திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
   மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
   திண்டிற லாண்டகையே.
[52]
மின்றொத் திடுகழல் நூபுரம்
   வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
   றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
   றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
   நீசொன்ன கொள்கையரே.

[53]
மீள்வது செல்வதன் றன்னையிவ்
   வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
   னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
   நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
   னெல்லை யணுகுவரே.

[54]
சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
   முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
   யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
   சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
   நீர்மையர் காணுநர்க்கே.

[55]
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
   தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
   தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
   டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
   கீழும் பழனங்களே.

[56]

Back to Top
8.217 பதினேழாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

எழுங்குலை வாழையின் இன்கனி
   தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
   துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
   பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
   னோநின் னருள்வகையே.

[1]
பரம்பயன் தன்னடி யேனுக்குப்
   பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
   வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
   வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
   தோன்றுமிக் குன்றிடத்தே.

[2]
சிறார்கவண் வாய்த்த மணியிற்
   சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
   உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
   றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
   காத்தும் பெரும்புனமே.

[3]
கடந்தொறும் வாரண வல்சியின்
   நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
   நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
   பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
   நின்னருள் தோன்றுவதே.

[4]
களிறுற்ற செல்லல் களைவயிற்
   பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
   நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
   பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
   நீசெய்யும் மெய்யருளே.

[5]
கழிகட் டலைமலை வோன்புலி
   யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
   யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
   கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
   துவளு மிவள்பொருட்டே.

[6]
விண்ணுஞ் செலவறி யாவெறி
   யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
   கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
   துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
   நோக்கினள் கார்மயிலே. 9;

[7]
வான்றோய் பொழிலெழின் மாங்கனி
   மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
   டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
   யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
   போலும் வரிவளையே. 9;

[8]
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
   நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
   காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
   படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
   படாது கலங்கினவே.

[9]
கலரா யினர்நினை யாத்தில்லை
   அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
   தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
   மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
   யோநும் வரையிடத்தே.

[10]
இறவரை உம்பர்க் கடவுட்
   பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
   நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
   பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
   ராம்பக லுன்னருளே.

[11]
சுழியா வருபெரு நீர்சென்னி
   வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
   பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
   லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
   வேதும் பயனில்லையே.

[12]
மையார் கதலி வனத்து
   வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
   சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
   தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
   மாலையின் முன்னினவே.

[13]
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
   பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
   வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
   கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
   னாஞ்சொல்லுந் தன்மைகளே.

[14]
வல்சியி னெண்கு வளர்புற்
   றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
   பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
   வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
   பவர்ப்பெறிற் கார்மயிலே.

[15]
வாரிக் களிற்றின் மருப்புகு
   முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
   நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
   சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
   நீர்மையென் னெய்துவதே.

[16]

Back to Top
8.218 பதினெட்டாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
   நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
   ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
   தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
   யோமெய்ம்மை யோதுநர்க்கே.

[1]
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
   ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
   துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
   றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
   திரவின்நின் னாரருளே.

[2]
குன்றங் கிடையுங் கடந்துமர்
   கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
   மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
   வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
   வகைசெப்பு தேமொழியே.

[3]
கேழே வரையுமில் லோன்புலி
   யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
   னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
   கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
   யேகு தனிவள்ளலே.

[4]
வருட்டின் திகைக்கும் வசிக்கின்
   துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
   வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
   யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
   னேசொல்லி யேகுவனே.

[5]
நல்லாய் நமக்குற்ற தென்னென்
   றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
   பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
   தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
   றார்நம் சிறந்தவரே.

[6]
அருந்தும் விடமணி யாம்மணி
   கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
   னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
   வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
   யாமினி வாழ்வகையே.

[7]
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
   ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
   லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
   மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
   கொலாமின்று செய்கின்றதே.

[8]
கானமர் குன்றர் செவியுற
   வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
   மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
   மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
   செல்லல் திருநுதலே.

[9]
மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
   அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
   அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
   யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
   வாறென்ப ரேந்திழையே.

[10]
வந்தாய் பவரையில் லாமயில்
   முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
   நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
   தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
   நையுந் திருவினர்க்கே.

[11]
மொய்யென் பதேஇழை கொண்டவ
   னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
   சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
   புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
   லாமிவ் வியலிடத்தே.

[12]
மன்செய்த முன்னாள் மொழிவழியே
   அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
   லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
   யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
   நீர்மைகொல் மொய்குழலே.

[13]
கருந்தினை யோம்பக் கடவுட்
   பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
   பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
   தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
   காரென வெள்வளையே.

[14]
வென்றவர் முப்புரஞ் சிற்றம்
   பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
   கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
   தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
   தோன்றும் நிரைவளையே.

[15]
வருவன செல்வன தூதுகள்
   ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
   கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
   டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
   வானின் றிருக்கின்றதே.

[16]
வேயின மென்தோள் மெலிந்தொளி
   வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
   அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
   கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
   ளாம்இத் திருந்திழையே.

[17]
சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
   றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
   றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
   பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
   யாடுமின் அன்னையரே.

[18]
மாட்டியன் றேயெம் வயிற்பெரு
   நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
   வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
   லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
   யாதன வாய்திறந்தே.

[19]
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
   கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
   இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
   காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
   றோன்று மவன்வடிவே.

[20]
வேலன் புகுந்து வெறியா
   டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
   வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
   னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
   நிற்பித்த பண்பினுக்கே.

[21]
அயர்ந்தும் வெறிமறி ஆவி
   செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
   பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
   தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
   ஆதுந் துறைவனுக்கே.

[22]
சென்றார் திருத்திய செல்லல்நின்
   றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
   தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
   லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
   உரைப்பனிக் கூர்மறையே.

[23]
யாயுந் தெறுக அயலவ
   ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
   கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
   இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
   தருவன் சுடர்க்குழையே.

[24]
வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
   தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
   போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
   எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
   றானொர் கழலவனே.

[25]
குடிக்கலர் கூறினுங் கூறா
   வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
   வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
   சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
   மறைக்கும் பரிசுகளே.

[26]
விதியுடை யாருண்க வேரி
   விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
   பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
   வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
   கொல்இனி வையகத்தே.

[27]
மனக்களி யாய்இன் றியான்மகிழ்
   தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
   தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
   ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
   சாரற் பொருப்பிடத்தே.

[28]
இளையா ளிவளையென் சொல்லிப்
   பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
   தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
   சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
   லைப்பயில் செல்வியையே.

[29]
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
   யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
   யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
   மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
   தேரின்று மெல்லியலே.

[30]
பூரண பொற்குடம் வைக்க
   மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
   ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
   லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
   றேங்கும் மணமுரசே.

[31]
அடற்களி யாவர்க்கு மன்பர்க்
   களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
   றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
   கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
   ரார்க்கும் வியன்முரசே.

[32]
என்கடைக் கண்ணினும் யான்பிற
   வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
   சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
   கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
   தோன்றும் முழுநிதியே.

[33]

Back to Top
8.219 பத்தொன்பதாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

பிரசந் திகழும் வரைபுரை
   யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
   நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
   பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
   தீரப் புகுந்துநின்றே.

[1]
இருந்துதி யென்வயிற் கொண்டவன்
   யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
   யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
   முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
   சிலம்பன் அருந்தழையே

[2]
சீரியல் ஆவியும் யாக்கையும்
   என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
   லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
   தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
   வணங்குமெங் காவலரே.

[3]
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
   லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
   நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
   யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
   ளயல்மன்னும் இவ்வயலே.

[4]
பொட்டணி யான்நுதல் போயிறும்
   பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
   ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
   மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
   போலிதன் காதலனே.

[5]
தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
   சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
   நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
   வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
   பரிசின்ன பான்மைகளே.

[6]
சிற்பந் திகழ்தரு திண்மதில்
   தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
   பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
   கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
   லாதவ னீர்ங்களிறே.

[7]
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
   மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
   லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
   தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
   றோர்தெய்வ முன்னலளே.

[8]
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
   ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
   தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
   லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
   றாதிவ் வணிநலமே.

[9]

Back to Top
8.220 இருபதாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

சீரள வில்லாத் திகழ்தரு
   கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
   றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
   இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
   ராகுவ ரேந்திழையே.

[1]
வீதலுற் றார்தலை மாலையன்
   தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
   வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
   றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
   யுற்ற புரவலரே.

[2]
கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
   பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
   விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
   லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
   தாங்குக் குறுகியதே.

[3]
பிரியா மையுமுயி ரொன்றா
   வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
   சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
   பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
   யென்னாம் புகல்வதுவே.

[4]

Back to Top
8.221 இருபத்தொன்றாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

மூப்பான் இளையவன் முன்னவன்
   பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
   ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
   றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
   தாழ்குழற் பூங்கொடியே.

[1]
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
   குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
   தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
   யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
   வோவின்று சூழ்கின்றதே.

[2]

Back to Top
8.222 இருபத்திரண்டாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

மிகைதணித் தற்கரி தாமிரு
   வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
   றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
   டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
   தாழ்தரு மொய்குழலே.

[1]
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
   உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
   பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
   மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
   போலுந் திருநுதலே.

[2]

Back to Top
8.223 இருபத்திமூன்றாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

போது குலாய புனைமுடி
   வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
   றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
   லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
   றொன்னா ரிடுமதிலே.

[1]
பொன்னி வளைத்த புனல்சூழ்
   நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
   யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
   பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
   கவரும் வியன்முகிலே.

[2]
கோலித் திகழ்சிற கொன்றி
   னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
   சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
   யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
   தாங்கொலென் போதரவே.

[3]
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
   மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
   றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
   தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
   பார்க்கும் புயலினமே.

[4]
சுற்றின வீழ்பனி தூங்கத்
   துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
   பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
   புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
   பெறுமிம் மயங்கிருளே.

[5]
புரமன் றயரப் பொருப்புவில்
   லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
   சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
   வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
   மிக்க தமியருக்கே.

[6]
வாழும் படியொன்றுங் கண்டிலம்
   வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
   வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
   றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
   ளாநின்ற கோகிலமே.

[7]
பூண்பதென் றே கொண்ட பாம்பன்
   புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
   மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
   கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
   வாய்த்த பனிமுகிலே.

[8]
தெளிதரல் காரெனச் சீரனஞ்
   சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
   மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
   ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
   பாரித் தலர்ந்தனவே.

[9]
தேன்றிக் கிலங்கு கழலழல்
   வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
   கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
   போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
   யோமெய்யிற் றோன்றுவதே.

[10]
திருமா லறியாச் செறிகழல்
   தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
   போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
   திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
   தோன்றுநம் பொன்னகர்க்கே.

[11]
புயலோங் கலர்சடை ஏற்றவன்
   சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
   வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
   கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
   இன்றோர் திருமுகமே.

[12]
சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
   பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
   தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
   துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
   தேரும் எழில்நகர்க்கே.

[13]
அருந்தே ரழிந்தனம் ஆலமென்
   றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
   மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
   தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
   முழங்கேல் வளமுகிலே.

[14]
பணிவார் குழையெழி லோன்தில்லைச்
   சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
   பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
   சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
   மாவோ டணுகினரே.

[15]
கருங்குவ ளைக்கடி மாமலர்
   முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
   றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
   ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
   நீடிய வைகலுமே.

[16]

Back to Top
8.224 இருபத்திநான்காம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

முனிவரும் மன்னரும் முன்னுவ
   பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
   சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
   தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
   வந்திக்கும் நன்னுதலே.

[1]
வறியா ரிருமை யறியா
   ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
   றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
   சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
   செவ்வாய்த் திருநுதலே.

[2]
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
   சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
   எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
   அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
   றம்ம கொடியவளே.

[3]
வானக்கடிமதில் தில்லையெங்
   கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
   ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
   கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
   இனிச்சென்று தேர்பொருளே.

[4]
சுருடரு செஞ்சடை வெண்சுட
   ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர்
   போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
   யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
   யேற்குப் புரவலரே.

[5]
மூவர்நின் றேத்த முதலவன்
   ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
   யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
   மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
   உரைப்பது பூங்கொடியே.

[6]
தென்மாத் திசைவசை தீர்தரத்
   தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
   யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்

   பூவணம் அன்னபொன்னேவன்மாக் களிற்றொடு சென்றனர்
   இன்றுநம் மன்னவரே.

[7]
ஆழியொன் றீரடி யும்மிலன்
   பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம்
   பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
   டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
   தேர்வந்து வைகுவதே.

[8]
பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
   யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
   தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
   லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
   என்னை யழிவித்தவே.

[9]
சேணுந் திகழ்மதிற் சிற்றம்
   பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
   திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
   லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
   தோன்றுமொர் பூங்கொடியே.

[10]
பொன்னணி யீட்டிய ஓட்டரும்
   நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
   தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
   ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
   கோநீ விரைகின்றதே.

[11]
நாய்வயி னுள்ள குணமுமில்
   லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
   பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
   பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
   தக்க துன் சிக்கனவே.

[12]
தீமே வியநிருத் தன்திருச்
   சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
   தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
   யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
   தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

[13]
தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.

[14]
சுற்றம் பலமின்மை காட்டித்தன்
   தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
   மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
   பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
   லாநின்ற கூர்ஞ்செக்கரே.

[15]
கண்ணுழை யாதுவிண் மேகங்
   கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
   றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
   மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
   ளாங்கொல்மன் பாவியற்கே.

[16]
அற்படு காட்டில்நின் றாடிசிற்
   றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
   னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
   தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
   ராநிற்கும் நீள்நகர்க்கே.

[17]
பாவியை வெல்லும் பரிசில்லை
   யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
   போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
   னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
   தேர்வந்து மேவினதே.

[18]
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
   றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
   ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
   ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
   தேர்வந்து தோன்றியதே.

[19]
மயின்மன்னு சாயலிம் மானைப்
   பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
   லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
   அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
   யாமுன் துவளுற்றதே.

[20]

Back to Top
8.225 இருபத்தைந்தாம் அதிகாரம் கோயில் (சிதம்பரம்)  

உடுத்தணி வாளர வன்தில்லை
   யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
   யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
   வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
   பற்றினர் மாதிரமே.

[1]
சுரும்புறு கொன்றையன் தொல்புலி
   யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
   பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
   றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
   தேய்வுற் றழிகின்றதே.

[2]
அப்புற்ற சென்னியன் தில்லை
   யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
   கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
   மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
   லாருயிர் தேய்பவரே.

[3]
தேவா சுரரிறைஞ் சுங்கழ
   லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
   நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
   தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
   தேனரும் பாவியனே.

[4]
செய்ம்முக நீல மலர்தில்லைச்
   சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
   யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
   பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
   கீழும் நெடுஞ்சுடரே.

[5]
பூங்குவ ளைப்பொலி மாலையும்
   ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
   கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
   சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
   தோமன் உறாவரையே.

[6]
தவஞ்செய் திலாதவெந் தீவினை
   யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
   நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
   யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
   தொடல்விடு நற்கலையே.

[7]
தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
   தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
   மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
   லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
   யார்கள் பயின்மனைக்கே.

[8]
இரவணை யும்மதி யேர்நுத
   லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
   ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
   யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
   வாறுநந் தன்மைகளே.

[9]
சிவந்தபொன் மேனி மணிதிருச்
   சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
   குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
   பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
   வந்து திருமனைக்கே.

[10]
குராப்பயில் கூழை யிவளின்மிக்
   கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
   காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
   யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
   புகுமிக் கடிமனைக்கே.

[11]
வந்தான் வயலணி யூர
   னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
   றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
   நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
   சூழ்ந்து பயின்றனவே.

[12]
வில்லிகைப் போதின் விரும்பா
   அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
   யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
   டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
   லூரற் கெதிர்கொண்டதே.

[13]
புலவித் திரைபொரச் சீறடிப்
   பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
   றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
   பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
   லாயின வூரனுக்கே.

[14]
செவ்வாய் துடிப்பக் கருங்கண்
   பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
   முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
   கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
   மெனநினைந் தின்னகையே.

[15]
மலரைப் பொறாவடி மானுந்
   தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
   றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
   தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
   கொல்லோ கருதியதே.

[16]
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
   கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
   யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
   பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
   யேதக்க வாய்மையனே.

[17]
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
   கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
   குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
   தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
   வாய்ந்த புதுப்புனலே.

[18]
சேயே யெனமன்னு தீம்புன
   லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
   தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
   பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
   தேர்வந்து மேவினதே.

[19]
அரமங் கையரென வந்து
   விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
   கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
   சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
   காத்துநம் பொற்பரையே.

[20]
கனலூர் கணைதுணை யூர்கெடச்
   செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
   றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
   லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
   லூர்கணப் பூங்கொடியே.

[21]
இறுமாப் பொழியுமன் றேதங்கை
   தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
   தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
   குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
   பொழிந்த இணைமுலையே.

[22]
வேயாது செப்பின் அடைத்துத்
   தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
   யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
   கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
   பால வியல்புகளே.

[23]
விறலியும் பாணனும் வேந்தற்குத்
   தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
   றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
   மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
   யோமை யறிந்திலரே.

[24]
திக்கின் இலங்குதிண் டோளிறை
   தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
   றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
   அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
   வேலெந் தனிவள்ளலே.

[25]
அன்புடை நெஞ்சத் திவள்பே
   துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
   றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
   தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
   லூரன் வரம்பிலனே.

[26]
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
   பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
   யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
   நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
   டோவெம் பயோதரமே.

[27]
தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
   சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
   இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
   யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
   தேவரும் பான்மையளே.

[28]
தேன்வண் டுறைதரு கொன்றையன்
   சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
   மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
   தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
   வாறுகொ னண்ணுவதே.

[29]
கயல்வந்த கண்ணியர் கண்ணினை
   யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
   விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
   தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
   னாட்டுப் பொலிபவரே.

[30]
கூற்றாயினசின ஆளியெண்
   ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
   ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
   பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
   போதிர்அத் தேர்மிசையே.

[31]
வியந்தலை நீர்வையம் மெய்யே
   யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
   வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
   அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
   விருந்தினர் கார்மயிலே.

[32]
தேவியங் கண்திகழ் மேனியன்
   சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
   தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
   தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
   வௌவுதல் கற்றனவே.

[33]
உடைமணிகட்டிச் சிறுதே
   ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
   நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
   தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
   கண்டனர் காதலரே.

[34]
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
   தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
   விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
   விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
   ஆத்தின்னி போந்ததுவே.

[35]
கொல்லாண் டிலங்கு மழுப்படை
   யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
   நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
   பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
   கொள்வன் பணிமொழியே.

[36]
மத்தக் கரியுரி யோன்தில்லை
   யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
   மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
   விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
   யோடிக் கெழுமினவே.

[37]
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
   காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
   னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
   துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
   பாலை யரசனுக்கே.

[38]
சேறான் திகழ்வயற் சிற்றம்
   பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
   வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
   மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
   தீண்டலெங் கைத்தலமே.

[39]
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
   பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
   லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
   மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
   அயிற்படைக் கொற்றவரே.

[40]
மின்றுன் னியசெஞ் சடைவெண்
   மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
   பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
   தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
   சாலுமன் னெங்களுக்கே.

[41]
செழுமிய மாளிகைச் சிற்றம்
   பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
   லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
   நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
   வாறு விரும்புவதே.

[42]
திருந்தேன் உயநின்ற சிற்றம்
   பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
   கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
   தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
   வருவதொர் வஞ்சனையே.

[43]
இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
   நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
   பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
   துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
   தேரும் அதரகத்தே.

[44]
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
   மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
   தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
   யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
   எம்மைப் பூசிப்பதே.

[45]
சிலைமலி வாணுத லெங்கைய
   தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
   தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
   கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
   மாலை கலுழ்ந்தனவே.

[46]
ஆறூர் சடைமுடி அம்பலத்
   தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
   டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
   செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
   கங்குற் சிறிதுயிலே.

[47]
ஐயுற வாய்நம் அகன்கடைக்
   கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
   தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
   வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
   யூரன்ன காரிகையே.

[48]
காரணி கற்பகங் கற்றவர்
   நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
   தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
   தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
   றியாவர்க்கும் ஊதியமே.

[49]

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_nool.php?book_name=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&author=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%C2%A0&lang=kannada;